schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 22 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி ஒன்று வந்தது.
இந்த செய்தியை அடிப்படையாக வைத்து, தமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read: மதிமுக கலைக்கப்பட்டு திமுகவுடன் இணைக்கப்படும் என்றாரா வைகோ?
தமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் அளித்த பேட்டியின் அடிப்படையிலேயே மேற்கண்ட தகவல் வைரலாகி வருகின்றது. ஆகவே உண்மையிலேயே அண்ணாமலை என்ன பேசினார் என்பது குறித்து தேடினோம்.
இந்த தேடலில், “பல மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் தேர்தலில் கூறிய விலையை கூட குறைக்கவில்லை. ஆகவே இதனை கண்டித்து வரும் நவம்பர் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் “என்று அண்ணாமலை பேசியதை நம்மால் அறிய முடிந்த்து.
தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இதுக்குறித்து பதிவு பதிவிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் தமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக பரவும் தகவல் தவறானது என்பதும், உண்மையில் தமிழக பாஜக ஆளும் திமுக அரசை எதிர்த்தே போராட்டம் நடத்தவிருக்கின்றது என்பதும் தெளிவாகின்றது.
பெட்ரோல் விலையானது அடிப்படை விலை, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, விநியோகிஸ்தர் கமிஷன் ஆகியவற்றை ஒன்று கூட்டியே ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகின்றது.
இதில் அடிப்படை விலை, மத்திய அரசு வரி, விநியோகிஸ்தர் கமிஷன் ஆகிய மூன்றும் நாடு முழுவதும் ஒரே அளவிலேயே இருக்கும். மாநில வரி மட்டும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப மாறுபடும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை முன்னதாக மாநில வரியாக 15 சதவீதம் VAT வரியுடன் லிட்டருக்கு ரூ. 13.02 சேர்த்து வசூலிக்கப்பட்டு வந்தது.
இதன்பின் இவ்வருடத்திற்கான பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவித்தப்பின் மாநில வரியாக 13 சதவீதம் VAT வரியுடன் லிட்டருக்கு ரூ. 11.52 சேர்த்து வசூலிக்கப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக அரசும் இம்மாதம் 3 ஆம் தேதி (நவம்பர் 3) உற்பத்தி வரியிலிருந்து ரூ.5 குறைத்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 3 ஆம் தேதி ரூ106.76க்கு விற்ற பெட்ரோல், தற்போது ரூ. 101.57க்கு விற்பனையாகி வருகின்றது.
ஆனால் ஆந்திரா, பஞ்சாப், குஜராத், ஹரியானா, உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில வரி வெகுவாக குறைக்கப்பட்டு பெட்ரோல் விலை ரூ.100க்கும் குறைவாக விற்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாரா சீமான்?
தமிழக பாஜக மத்திய பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தவிருப்பதாக பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024
|