schema:text
| - Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: ஈரோடு இடைத்தேர்தலில் தபால் ஓட்டுகளில் நாம் தமிழர் கட்சியை நோட்டா முந்தியது.
Fact: இத்தகவல் தவறானதாகும். தபால் ஓட்டுகளில் நாதக 13 ஓட்டுகளும், நோட்டா 8 ஓட்டுகளும் பெற்றிருந்தன.
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்றய் முன்தினம் (பிப்ரவரி 08) வெளியானது. அதில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 74.7 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பெற்றார்.
இந்நிலையில் தபால் ஓட்டுகளில் நோட்டாவை விட சீதாலட்சுமிக்கு குறைவாக ஓட்டு கிடைத்தாக தகவல் ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மார்ச் 01ஆம் தேதி விசிகவை திமுகவுடன் இணைக்க உள்ளாரா திருமாவளவன்?
Fact Check/Verification
ஈரோடு இடைத்தேர்தலில் தபால் ஓட்டுகளில் நாம் தமிழர் கட்சியை நோட்டா முந்தியதாக ஊடகங்களில் செய்திகளில் நோட்டாவுக்கு 18 ஓட்டும், நாதகவுக்கு 13 ஓட்டும் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுக்குறித்த உண்மையை அறிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆராய்ந்தோம். அதில் இத்தகவல் தவறானது என தெரிய வந்தது. தபால் ஓட்டுகளில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமிக்கு 13 ஓட்டு கிடைத்தது உண்மையே. ஆனால் நோட்டாவுக்கு 18 ஓட்டுகள் கிடைத்திருக்கவில்லை; நோட்டாவுக்கு 8 ஓட்டுகள் மட்டுமே கிடைத்திருந்தது.
இதன்படி பார்க்கையில் நோட்டா நாம் தமிழர் கட்சியினை முந்தியதாக ஊடகங்களில் வந்த தகவல் தவறானது என உறுதியாகின்றது.
Also Read: நடிகர் கார்த்தியிடம் சீமான் 1 கோடி கேட்டதாக பரவும் எடிட் வீடியோ!
Conclusion
ஈரோடு இடைத்தேர்தலில் தபால் ஓட்டுகளில் நாம் தமிழர் கட்சியை நோட்டா முந்தியதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும். உண்மையில் நாதகவை விட நோட்டா குறைவான ஓட்டுகளே பெற்றிருந்தது.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
Election Commission Website
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
|