schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
‘கடத்தல் மண் எடுத்து தரப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கோவையை சார்ந்த வாசு மணல் சப்ளையர்ஸ் எனும் நிறுவனத்தின் பெயர் பலகையில் ‘கடத்தல் மண் எடுத்து தரப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை யாரோ படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர, திமுக ஆட்சியில் மணல் கடத்தல் பகிரங்கமாக நடைப்பெறுவதாக கூறி இப்புகைப்படமானது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read: கோடையில் அதிகபட்ச வரம்புக்கு பெட்ரோல் நிரப்பினால் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் என்றதா இந்தியன் ஆயில்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கடத்தல் மண் எடுத்து தரப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைத் தொடர்ந்து இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
கோவை வாசு மணல் சப்ளையர்ஸ் நிறுவனத்தாரை தொடர்புக் கொண்டு பெயர் பலகை குறித்து விசாரித்தோம்.
இதற்கு அவர்கள், “எங்கள் பகுதிகளில் வீடு இடித்த மண்ணை கடத்தல் மண் என்றுதான் குறிப்பிடுவோம். இம்மண்ணை வீட்டின் முன்புறம், மாட்டுக் கொட்டகை, பழைய கிணறு மூடுவதற்கு போன்றவற்றிற்கு பயன்படுத்துவார்கள். இதை தவிர்த்து இதில் கடத்தல் என்று எதுவும் இல்லை.
எங்கள் கடை மட்டுமல்ல, எங்கள் பகுதிகளில் இருக்கும் வேறு சில கடைகளிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஷயம் பிரச்சனையாகியதால் பெயர்பலகையை மாற்ற முடிவெடுத்துள்ளோம். கடத்தல் மண் என்பதற்கு பதிலாக வீடு இடித்த மண் என்று குறிப்பிட உள்ளோம்” என்று கூறினர்.
இதன் அடிப்படையில் பார்க்கையில் வீடு இடித்த மண்ணே கடத்தல் மண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மணல் கடத்தலுடன் தொடர்புப்படுத்தி தவறாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது.
வைரலாகும் இத்தகவல் தவறானது என்று ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது.
Also Read: சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு 39,532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதா?
வீடு இடித்த மண்ணை கடத்தல் மண் என்று குறிப்பிட்டிருந்ததை மணல் கடத்தலுடன் தொடர்புப்படுத்தி சமூக வலைத்தளங்களில் சிலர் இதை தவறாக பரப்புகின்றனர் என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Source
Newschecker Conversations
Vikatan Article
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
March 25, 2022
Ramkumar Kaliamurthy
January 10, 2023
|